திங்கள், 17 ஜனவரி, 2011

தமிழர்களின் மனம்

தமிழர்களின் மனம்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா......!!??
அந்தமானில் வேலை செய்கின்ற சில மெத்த படித்தவர்கள், தமிழ் நாட்டில் பெரிய கான்வென்ட்களில் தயாரானவர்களாக இருக்கிறார்கள்। மிகச்சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக பேசிப் பழகியிருந்ததால் அதை ஓர் அன்னிய மொழி போலவே நினைக்காமல் அசட்டையாக பேசி விடுகிறார்கள்। இவர்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும் போதுகூட தமிழ் கலந்த ஆங்கிலத்தில்தான் உரையாடுகின்றனைர்। இந்நிலை அந்தமானில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும்தான்।
அவர்களுடைய ஆங்கிலப் பேச்சின் வேகமும், லாவகமும், நளினமான ஸ்டைலும், யாராலும் புரிந்து பின்பற்ற முடியாததாக இருக்கிறது।
அவர்களோடு சரிசமமாக ஆங்கிலம் பேசமுடியாது என்று அவர்கள் நினத்துக் கொள்கிறார்கள்। ஆனால் தம் தாய் மொழியான தமிழ் மொழியில் பேச எழுதத் தெரிந்தும் தமிழ் மொழியைப் பேசுவதில்லை;எழுதுவதில்லை। அப்படியே பேசினாலும் பிழையாக பேசுகிறார்கள்। ழ,ல,ள உச்சரிப்பினைப் பற்றியே அவர்கள் கவலைப் படுவதில்லை। அதே சமயம் ஆங்கில உச்சரிப்பைப் பற்றி அருமையாக பாடம் நடத்துகிறார்கள்। २६ எழுத்துகளைக் கொண்டு ஆங்கிலேயன் எப்படியெல்லாம் தன் மொழியை வளமாக மார்ரியிருக்கிறான்। தமிழ் தமிழ் என்று ஏம்பா சாகிறீங்க। உங்களைப் போல ஆட்களாலதான் தமிழ் மொழி வளர்ரதில்ல....
எப்போதேனும் என்னைப்போன்றவர்கள், இந்த ஆங்கிலக் கனவான்கள் அல்லது சீமாட்டிகளிடம் மாட்டிக்கொண்டுவிட்டால் எங்களின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும்। அவர்களிடம் நாம் தமிழில் ஏதேனும் கேட்டுவிட்டால் ஏதோ தீராத நோயாளியை பார்ப்பது போல ஒரு பார்வை
அடப் பாவமே, உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?’ என்றுஅலட்சியத்துடன் பார்த்துச் சிரிப்பது இன்னும் கொடுமையாக இருக்கும்। என் வாழ்வில் நீநீநீ.............ண்...........ட.......... நாட்களுக்கு முன்பு அதாவது १९७५ ஆம் ஆண்டில் எனக்கு வேலை கிடைத்தது। மருத்துவச் சான்று (மெடிக்கல் பிட்னஸ்) பெறுவதற்காக அரசு மருத்துவமனைக்கு அந்தமான் மாவட்ட தி.மு.க.செயலர் திரு அ. இரா. மருதவாணன் அவர்கள் எங்களை (நான், பழ. முருகு) அழைத்துச் சென்றார்। நான் எப்போதும் அண்ணன் மருதவாணன் அவர்களுடனே இருப்பேன்।
(தொடரும்)

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

அந்தமானில் தமிழ்க் கலாச்சார சுவடுகள் - சில கோயில்கள்






அந்தமானில் தமிழ்க் கலாச்சார சுவடுகள் - சில கோயில்கள்





ஞாயிறு, 4 ஜூலை, 2010

புதியதோர் உலகம்

புதியதோர் உலகம் செய்வோம்
புதிய சிந்தனைகளோடு

வலியதோர் உலகம் செய்வோம்
வலிய சிந்தனைகளோடு

செம்மையான உலகம் செய்வோம்
செம்மொழிச் சிந்தனைகளோடு.

வியாழன், 29 ஏப்ரல், 2010

இடைவேளை

தமிழீர்!
கோடைவிடுமுறயை முன்னிட்டு புதைய இடுகைகளை சில நாட்கள் தர இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், 22 மார்ச், 2010


தமிழ்க் கலாச்சார இயக்கம் 1981 இல் ஆரம்பிக்கப்பட்டது.
தலைவர் -ச.ப.இளங்கோ
செயலாளர் - அந்தமான் அருண்
பொருளாளர் - நா.செயராமன்

தமிழ்க் கலாச்சார இயக்கத்தின் முதல் மலர் பொங்கல் மலராக 1982 இல் வெளி வந்தது. இம் மலரில் இடம் பெற்ற கவிதைகள், கதைகள். கட்டுரைகள்

1.கலைமகள் (பாடல்) - சு.தியாகராஜன் இசை ஆசிரியர்
2.அந்தமான் தீவுகளின் மக்கள் தொகை
3.அந்தமான் எழில் (கவிதை) - கவிஞர்.கூ.அடி.கவிஞன்
4.நீலக்கடல் நடுவிலே பச்சை சொர்க்கம் அந்தமான் நிக்கோபார் தீவுகள் (கட்டுரை) - வீ. வீ ரையா.
5.மன்னனின் மயக்கம் (நாடகம்) - பழமுருகு
6.நினைத்'தேன்' (கவிதை) - பி.எல்.வள்ளியம்மை முருகப்பன்
7.தை மாதத் திருவிழா (கவிதை) - தமிழன்பன்
8.அந்தமான் தீவுகளே! (கவிதை) - த.அருணாச்சலம்
9.மணல் வீடு (சிறுகதை) - பேனா செல்வராஜ்
10.பாவத்தின் சம்பளம் (சிறுகதை) -தனிஅரசு (நிம்புடேரா)
11.விண்முட்ட ஏற்ம் விலை (வெண்பா) - எஸ்.நெல்சன் பாலையா
12.தமிழென்றும் உலகாளவே (கவிதை) -புலவர்.உ.உடையப்பன்
13.குடியரசுப் பள்ளு(கவிதை) - ஆர்.பரிமளா காந்தி
14.அழித்த்ழுதாத் தீர்ப்பு (சிறுகதை) -சாலை உமர்
15.ஒரு முகவரிக்காக.... (புதுக்கவிதை) - நா.சந்திர மோகன்
16.கதவு திறந்தது (சிறுகதை) - குன்றூரான்
17.நான் பிறந்த மண் (கட்டுரை) - பி.எல்.முருகப்பன்
18.யாரைப்....... பாட ..... (கவிதை) - ப.ம.ஜோசப்
19.மறக்கலாமா ... (சிறுகதை) -கருங்காலக்குடி ரகிம்
20.இயற்கை சிரிக்கிறது (சிறுகதை) -முத்தழகு
21.இழப்பு (சிறுகதை) -அந்தமான் அருண்
22.வளரும் சமுதாயத்தில் வங்கியின் பணி (கட்டுரை) -மு.ஜெயக்குமார்
23.கானல் நீர் (கவிதை) -சீர்காழி நஜீர்
24.அந்தமானில் தமிழர் (கவிதை) -ச.ப.இளங்கோ
25.பூச்சிகள் உலகம் (கட்டுரை) - ந.ஜெயராமன்
26.ஆர்த்தனர் அன்று அன்புத்தமிழர் (கவிதை) - கதி.மாணிக்கம்
27.முகாரிக்கு முன் ஒரு ஆனந்த பைரவி (சிறுகதை) - நா.சந்திர மோகன்

சனி, 13 மார்ச், 2010


தமிழ்க் கலாச்சார இயக்கம்.

1980 களில் அந்தமான் தமிழ் எழுத்தாளர்கள், படிப்பாளிகள் சிலர் கூடி தமிழ்க் கலாச்சார இயக்கத்தை தொடங்கினோம்.
தலைவர் - ச.ப. இளங்கோ
செயலாளர் - அந்தமான் அருண்
பொருளாளர் - நா. செயராமன்
தமிழ்க் கலாச்சார இயக்கத்தின் முதல் மலர் பெயர் 'தீவுச்சுடர்' 1982 ஆம் ஆண்டு ஆண்டு மலராக தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கியது.
'தீவுச்சுடர்' 1983 இல் இரண்டாவது ஆண்டு மலர் வெளிவந்தது.